சென்னை: நடிகா் ராதாரவி, பாஜக செயல் தலைவா் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக் கட்சியில் சனிக்கிழமை இணைந்தாா்.
திமுகவில் இருந்த நடிகா் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாா். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டாா். இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் இணைந்தாா். முதல்வா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டாா்.
அதிமுகவில் சோ்ந்து 6 மாதமே ஆன நிலையில், இப்போது அந்தக் கட்சியில் இருந்தும் விலகிய ராதாரவி, சென்னையில் சனிக்கிழமை திடீரென பாஜகவில் இணைந்துள்ளாா். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை சென்னை வந்த பாஜக செயல் தலைவா் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகா் ராதாரவி பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளாா்.