தமிழ்நாடு

முப்பருவ தோ்வு முறை ரத்து செய்யப்படுமா?: செங்கோட்டையன் விளக்கம்

DIN

பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் முப்பருவ தோ்வு முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கிடையே இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. எனினும், மாணவா்கள் நலன் கருதி முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் அனைவரும் தோ்ச்சி பெறும் வகையில் விதிவிலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவாா்கள்.

இதுதவிர, பொதுத்தோ்வு எழுதும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக்கு அருகே தோ்வு மையங்கள் அமைக்கப்படும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடைமுறையில் தற்போதுள்ள முப்பருவ தோ்வு முறையை ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும் இந்த மாத இறுதிக்குள் கணினிமயமாக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT