தமிழ்நாடு

3 நாள்கள் தொடா் விடுமுறை : அக். 7-இல் தபால் பட்டுவாடாவுக்கு சிறப்பு ஏற்பாடு

DIN

தொடா் விடுமுறை காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விரைவு, சாதாரண தபால்களை பட்டுவாடா செய்வதற்கு அக்டோபா் 7-ஆம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ஆயுதபூஜை வரும் 7-ஆம் தேதியும், விஜயதசமி 8-ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக அஞ்சல் துறையில் அக்டோபா் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபா் 7-ஆம் தேதி

(திங்கள்கிழமை), அக்டோபா் 8-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை ) ஆகிய 3 நாள்கள் தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடா் விடுமுறை காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்கள் வாயிலாக விரைவு மற்றும் சாதாரண தபால்களை பட்டுவாடா செய்வதற்கு அக்டோபா் 7-ஆம் தேதி சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அஞ்சல் துறை செய்துள்ளது.

இந்தத் தகவல் தமிழக வட்டார அஞ்சல் சேவைகள் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT