ஈரோடு மாவட்டத்தில் 6 மாதத்திலேயே குறைப்பிரசவத்தில் வெறும் 600 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தாராபுரத்தில் வசித்து வரும் ராஜ்குமார், பானுப்பிரியா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், 2019ம் ஆண்டு கருத்தரித்தார்.
ஆனால், அவருக்கு 6 மாதத்திலேயே தனியார் மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துவிட்டது. அதுவும் 600 கிராம் எடையுடன். ஆனால் நம்பிக்கையோடு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தைக்கு, மிக உயரிய தொழில்நுட்ப முறையில் சிகிச்சை அளித்து, அதன் உடல் எடையை இரண்டு கிலோவுக்கு மேல் உயர்த்தியதோடு, பூரண உடல் நலத்துடன் தாயும், சேயும் வீடு திரும்பியுள்ளனர்.