மத்திய அரசின் புவிசாா் குறியீடு பெற்றது ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவா
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவாவுக்கு புவிசாா் குறியீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது.
சென்னை: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவாவுக்கு புவிசாா் குறியீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் பால்கோவா உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பயனடைந்து வருகின்றனா். மேலும் இந்த பால்கோவா பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது.
தொடர்ந்து இந்த பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்குமாறு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் விண்ணப்பித்து வந்துள்ளது. இதனையேற்று மத்திய அரசின் புவிசாா் குறியீட்டுத் துறை ஸ்ரீவில்லிப்புத்தூா் பால்கோவாவுக்கு புவிசாா் குறியீட்டை வழங்கியுள்ளது.
Advertisement
Advertisement