கொள்ளிடம் ஆற்றில் விபத்து 
தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் மாயம்? 

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை படகில் கடக்க முயன்ற போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அரியலூர்: அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை படகில் கடக்க முயன்ற போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் எதிர் கரைகளில் மேலராமநல்லூர் மற்றும் கீழராமநல்லூர் என இரண்டு ஊர்கள் அமைந்துள்ளன. மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே அந்தபகுதி மக்கள் உள்ளனர் என்று தெரிகிறது. கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர்வரத்து இருந்துள்ளது.

இந்நிலையில் புதன் மாலை அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு ஒரு படகில் 30 பேர் சென்றுள்ளனர்.  ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக படகு  கவிழ்ந்தது. இந்த விபத்தில்சிக்கியவர்களில் 10 பேர் மீட்கப்பட்டநிலையில், மேலும் 10 பேர் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் தஞ்சம் அடைந்தனர்.

படகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

ஒருவர் மட்டுமே வாழும் சிவகங்கை நாட்டாகுடி கிராமம்! காரணம் என்ன?

மூக்குத்தி முத்தழகு... ராய் லட்சுமி!

உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

பராசக்தியில் வில்லனாக நடிக்க வேண்டியது...ஆனால்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

SCROLL FOR NEXT