தமிழ்நாடு

செப். 15 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (செப்டம்பர் 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (செப்டம்பர் 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்,  மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றனர்.
திருப்பத்தூரில் 60 மி.மீ. மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 60 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தலா 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் ஜி.பஜார், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் தலா 30 மி.மீ. மழை பதிவானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT