நளினி முருகன் 
தமிழ்நாடு

ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து சிறைக்குத் திரும்புகிறார் நளினி 

தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார் 

DIN

வேலூர்: தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற ஏழு பேர்களில் ஒருவரான முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவியான நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஆரித்ராவின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டுப் பெற்ற நளினி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். தனக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒருமாதம் நீடிக்குமாறு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு நீட்டிப்பு செய்யப்படவில்லை.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT