தமிழ்நாடு

ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து சிறைக்குத் திரும்புகிறார் நளினி 

DIN

வேலூர்: தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற ஏழு பேர்களில் ஒருவரான முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவியான நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஆரித்ராவின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டுப் பெற்ற நளினி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். தனக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒருமாதம் நீடிக்குமாறு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு நீட்டிப்பு செய்யப்படவில்லை.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT