அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் 
தமிழ்நாடு

அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மரியாதை

அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் உள்பட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

DIN

அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் உள்பட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

அதன்படி, அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை 10 மணியளவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT