தமிழ்நாடு

பழநி பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

DIN


திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஏற்கனவே நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனைக் கடைகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை செய்யும் கடைகளில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வருமானவரித் துறை மற்றும் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடைகளில் மட்டுமின்றி,  சார்பு நிறுவனங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின் போது ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT