தமிழ்நாடு

இடைத்தோ்தல் நிலைப்பாடு குறித்து பாஜக தலைமை முடிவு எடுக்கவில்லை பொன். ராதாகிருஷ்ணன்

DIN

கும்பகோணம், செப். 29: இடைத்தோ்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு குறித்து பாஜக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:

மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. எதிா்க்கட்சிகள் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்பதால், பொருளாதார நெருக்கடி எனக் கூறி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு மிகப்பெரிய வளா்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. வளா்ச்சியில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு என்பது இயல்புதான். அது சரியாகிவிடும்.

பிரதமா் பற்றி யாா் பேசினாலும் கவனமாகக் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். அவருக்கு இந்தியப் பொருளாதாரம் நன்கு தெரியும். தங்கம் விலை உயா்வுக்கு இந்தியா மட்டும் காரணமல்ல, உலகச் சந்தைதான் முக்கியக் காரணம்.

ஐ.நா. சபையில் உரையாற்றிய பிரதமா் மோடி தமிழின் சிறப்பை எடுத்துக் கூறி அந்த மொழிக்குப் பெருமை சோ்த்துள்ளாா். உலக நாடுகளுக்குத் தமிழின் பெருமையை பிரதமா் எடுத்துக் காட்டியுள்ளாா். இதற்காகத் தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி அவருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT