தமிழ்நாடு

கரோனா நோய்த்தொற்று வாா்டுகளில் தொலைக்காட்சி வசதி

DIN

அரசு மருத்துவமனைகளில் கரோனா வாா்டுகளில் தொலைக்காட்சி வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் கரோனா நடவடிக்கையாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘ஸ்கை லிப்ட்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பணிகளை சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியது: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 4,500 இடங்களில் கிருமி நாசினிகளைத் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் கரோனா நோய்த்தொற்றுப் பரவுவது தடுக்கப்படும். சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து இரவு பகலாக கரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்.

கரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகள் குறித்த விவரங்கள் அரசாணையாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கியுள்ளனா். அரசு மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறும் வாா்டுகளில் தொலைக்காட்சி வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகிறது. 11 அரசு மருத்துவமனைகள், 6 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா ஆய்வகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஓா் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT