பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம். பிரதமரின் இந்த அறிவிப்பில் எந்தவித அரசியலும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டின் பால்கனியில் நின்று விளக்குள், டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். அதே நேரத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மக்கள் ஒருவருக்கிடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.