தமிழ்நாடு

சென்னை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

சென்னையில் மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுபோல, தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 571 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் பலியாகினர். 

இந்த நிலையில் சென்னை அசோக் நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள பொதுசுகாதார மையத்தில் பணிபுரிந்து வரும் மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் வானகரத்தில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த 16/03/20 வரை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கரோனோ வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT