விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சரகம் கூவாகம் கிராமத்தில், உலக திருநங்கையர்கள் பங்கேற்கும் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் 21-04-20 ஆம் தேதி கொடியேற்றி தேர் திருவிழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் பரவி வருவதை தடுக்க வேண்டி 144 தடை உத்தரவு போட்டிருப்பதால், அதை மதிக்க வேண்டி நடக்க இருந்த திருவிழா குறித்து கூவாகம் - நத்தம் - தொட்டி - -சிவலிங்ககுலம் - அண்ணா நகர் - பாரதி நகர் - கீழ்குப்பம் வேலூர் - கொரட்டூர் - கூவாகம் ஆதிதிராவிட -ஊர் மக்கள் மற்றும் திருவிழா நடத்தும் நாட்டாமைகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.
இதில்,அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மதிக்க வேண்டியும், நோய் பரவாமல் இருக்கவும் 21-ஆம் தேதி முதல் நடக்க இருந்த கூவாகம் தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு சித்திரை மாதம் வழக்கம்போல் தேர் திருவிழா நடக்கும் என மேற்கண்ட ஊர் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.