கோவையில் இன்று ஒரேநாளில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 172 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இன்று மட்டும் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, அம்மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 12 பேருக்கும், சென்னையில் 9 பேருக்கும், நெல்லையில் 8 பேருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பதித்தோர் விவரம்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.