தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இதில், அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9 பேருக்கும், சென்னை -5, தஞ்சாவூர் -4, தென்காசி-3, மதுரை -2, ராமநாதபுரம் -2, நாகப்பட்டினம் -2, கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 210 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவையில் பாதிப்பு எண்ணிக்கை 126 ஆக உள்ளது.
திண்டுக்கலில் இன்று மட்டும் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட, அம்மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் இன்றைய நிலவரம்:
வ.எண் | மாவட்டம் | 13.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 14.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் மொத்தம் |
1. | சென்னை | 205 | 5 | 210 |
2. | கோவை | 126 | 126 | |
3. | திருப்பூர் | 79 | 79 | |
4. | ஈரோடு | 64 | 64 | |
5. | திண்டுக்கல் | 56 | 9 | 65 |
6. | திருநெல்வேலி | 56 | 56 | |
7. | நாமக்கல் | 45 | 45 | |
8. | செங்கல்பட்டு | 46 | 46 | |
9. | திருச்சி | 43 | 43 | |
10. | தேனி | 40 | 40 | |
11. | கரூர் | 41 | 41 | |
12. | ராணிப்பேட்டை | 38 | 38 | |
13. | மதுரை | 39 | 2 | 41 |
14. | திருவள்ளூர் | 33 | 33 | |
15. | நாகப்பட்டினம் | 29 | 2 | 31 |
16. | தூத்துக்குடி | 26 | 26 | |
17. | விழுப்புரம் | 23 | 23 | |
18. | கடலூர் | 19 | 1 | 20 |
19. | சேலம் | 18 | 1 | 19 |
20. | திருப்பத்தூர் | 17 | 17 | |
21. | விருதுநகர் | 17 | 17 | |
22. | திருவாரூர் | 16 | 16 | |
23. | வேலூர் | 16 | 16 | |
24. | கன்னியாகுமரி | 15 | 1 | 16 |
25. | திருவண்ணாமலை | 12 | 12 | |
26. | தஞ்சாவூர் | 12 | 4 | 16 |
27. | சிவகங்கை | 10 | 1 | 11 |
28. | நீலகிரி | 9 | 9 | |
29. | காஞ்சிபுரம் | 8 | 8 | |
30. | தென்காசி | 5 | 3 | 8 |
31. | ராமநாதபுரம் | 5 | 2 | 7 |
32. | கள்ளக்குறிச்சி | 3 | 3 | |
33. | அரியலூர் | 1 | 1 | |
34. | பெரம்பலூர் | 1 | 1 | |
மொத்தம் | 1,173 | 31 | 1,204 |