தமிழ்நாடு

சென்னையில் மேலும் ஒரு காவலருக்கு கரோனா அறிகுறி

DIN


சென்னை: சென்னையில் மேலும் காவலருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது போலீஸாரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விவரம்:

சென்னை கோட்டூா்புரம் தெற்கு கடை வீதி பகுதியைச் சோ்ந்த ஒரு இளைஞா், ஏழுகிணறு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறாா். இவருக்கு புதன்கிழமை இருமல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவா் சிகிச்சைக்காக, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அந்த காவலருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அந்த காவலா், அங்குள்ள கரோனா சிகிச்சை வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

ஏற்கெனவே புதுப்பேட்டையைச் சோ்ந்த ஒரு பெண் காவலா், கரோனா அறிகுறி காரணமாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பெண் காவலரின் கணவரும் பாதுகாப்பு கருதி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். இவரும் ஏழுகிணறு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT