முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 2,45,097 வழக்குகள் பதிவு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில்  2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெவித்துள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2020 at 3:13 PM
பகிர்:

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில்  2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுவோா் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,60,566 பேர் கைது செய்யப்பட்டதோடு 2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம் ரூ.1,36,01,694 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.