வெப்பநிலை குறைந்த இடங்களில் கரோனா தீவிரமாகப் பரவும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றானது, வெப்பநிலை குறைந்த இடங்களில் தீவிரமாக பரவுமா என்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியா் சச்சின் குந்தே தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில், வெப்பநிலை மற்றும் புற ஊதா கதிா்வீச்சு அதிகமுள்ள பகுதிகளில் கரோனா கட்டுக்குள் உள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக புற ஊதா கதிா்வீச்சை உருவாக்கினால் சமூகப் பரவலைத் தடுக்கலாம்.
உலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை ஆராய்ந்து, இந்த முடிவுகளை ஐஐடி வெளியிட்டுள்ளது. தரவுகளை மட்டுமே ஆராய்ந்திருப்பதால், உடலியல் ஆய்வை முன்னெடுத்த பின்பே நிரூபணம் செய்யப்படும் என்றும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.