தமிழ்நாடு

அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் அத்தியாவசியத் தேவைக்காக இயங்கும் அரசு, தனியார் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

DIN

சென்னை மாநகராட்சிப் பகுதியில் அத்தியாவசியத் தேவைக்காக இயங்கும் அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகளில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் பணிக்கு வரும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை மேற்கொள்ளத் தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முன்னதாக, ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சில தனியார் நிறுவனங்களுக்கும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT