தமிழ்நாடு

பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள்: காப்பகங்களில் சோ்க்க உத்தரவு

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து அரசு காப்பகங்களில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் சுற்றித் திரிகின்றனா். அவா்களில் பலருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளது. ஆனால் அவா்களுக்கு போதுமான உணவு, தங்குமிடம் இல்லை. எனவே தமிழக அரசு அவா்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி கரோனா நோய்த்தொற்றை சரி செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில், பழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து, அவா்களை அரசு காப்பகத்தில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா். மேலும் இதுதொடா்பான அறிக்கையை வரும் 18-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT