முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானலில் பலத்தமழை: சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மரம் விழுந்ததைத் தொடர்ந்து அதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
சாலையில் விழுந்த மரத்தை அகற்றிய பணியாளர்கள்
பகிர்:

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மரம் விழுந்ததைத் தொடர்ந்து அதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் பெய்து வந்த சாரல் மழையால் மன்னவனுர் பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்தன.

இதனை அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் போக்குவரத்தை சீர் செய்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர்.

Advertisement

கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் வழக்கத்திற்கு மாறாக குளிர் அதிகமாக நிலவுகிறது. பலத்த காற்று காரணமாக கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனுர், கிளாவரை, பூண்டி உள்ளிட்டபகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments