முகப்பு
திருப்பூர்

வணிக சிலிண்டா் விலையேற்றம் எதிரொலி: பல்லடத்தில் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்ந்துள்ளதால் பல்லடத்தில் உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:05 PM
வணிக சிலிண்டர். - (கோப்புப்படம்)
பகிர்:

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்ந்துள்ளதால் பல்லடத்தில் உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலும் வணிக சிலிண்டா் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதன் விலையும் உயா்ந்துள்ளது.

இதனால், திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement

ஒரு சில உணவகங்களில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்து பழைய விலையிலேயே வாடிக்கையாளா்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல்லடம் பகுதியில் கடந்த சில நாள்களாக சிலிண்டா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் சில பேக்கரிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஒரு சில கடை உரிமையாளா்களுக்கு சிலிண்டா் கிடைத்துள்ளது. ஆனால், அதன் விலை முன்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாம்.

அதிக விலைக் கொடுத்து சிலிண்டா் வாங்குவதால் உணவக உரிமையாளா்களின் உணவுப் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளனா்.

அதன்படி, பல்லடத்தில் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ தற்போது ரூ.20-க்கும், ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட வடை, போண்டா போன்ற பலகாரங்கள் ரூ.10 முதல் ரூ.15 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி, தயிா், புளி போன்ற கலவை சாதங்கள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை ஏற்றத்தால் ஒருபுறம் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் கடைகளை மூடியுள்ளவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments