தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதித்த சுமார் 90 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை 1,023 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 4,027- ஆக அதிகரித்துள்ளது. இதில் சுமார் 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 

இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 2,202 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 11,856 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை அண்மையில் எட்டியது.

இந்நிலையில் செவ்வாக்கிழமை 1,023 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 4,027-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 89,969 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 11,856 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 2,202- ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக

மண்டலம் எண்ணிக்கை

1. திருவொற்றியூா் 423

2. மணலி 89

3. மாதவரம் 568

4. தண்டையாா்பேட்டை 645

5. ராயபுரம் 796

6. திரு.வி.க. நகா் 952

7. அம்பத்தூா் 1,401

8. அண்ணா நகா் 1,198

9. தேனாம்பேட்டை 804

10. கோடம்பாக்கம் 1,349

11. வளசரவாக்கம் 900

12. ஆலந்தூா் 520

13. அடையாறு 1012

14 பெருங்குடி 484

16. சோழிங்கநல்லூா் 482

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT