தமிழ்நாடு

வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று

DIN

வாசுதேவநல்லூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. 

இந்நிலையில், வாசுதேவநல்லூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்  மனோகரனுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக. சேர்க்கப்பட்டுள்ளார். இவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

SCROLL FOR NEXT