தமிழ்நாடு

பிரணாப் முகர்ஜி விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி

DIN

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் கட்டி இருந்ததையடுத்து, ரத்தநாள அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு கரோனா பரிசோதனை 
செய்தததில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. 

மேலும், அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து, அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும், பிரணாப் முகர்ஜி விரைவில் நலம்பெற வேண்டுவதாகத் தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று பிரணாப் முகர்ஜி குறித்து நலம் விசாரித்தார். 

இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT