முகப்பு
நதிகள் இணைப்பு: நீர் சக்தித் துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை
தமிழ்நாடு

நதிகள் இணைப்பு: நீர் சக்தித் துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாடு

நதிகள் இணைப்பு: நீர் சக்தித் துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
நதிகள் இணைப்பு: நீர் சக்தித் துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை
பகிர்:

சென்னை: தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கலந்துரையாடினார்.

மேலும், தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் கூறுகள், காவிரி - கோதாவரி நதிகளை இணைப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →