முகப்பு
தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக எஸ்.பிரபாகா் நியமனம்

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக எஸ்.பிரபாகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக எஸ்.பிரபாகா் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், கோவை மாநகராட்சி ஆணையாளரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை பிறப்பித்தாா்.

அதன் விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):-

எஸ்.பிரபாகா் - இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்)

வி.ஜெயசந்திர பானு ரெட்டி - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் (பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல் அதிகாரி)

ஜி.லலிதா - ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநா் (ஆசிரியா் தோ்வாணையத் தலைவா்)

ஸ்ரவண் குமாா் ஜடாவத் - வேளாண்மைத் துறை துணைச் செயலாளா் (கோவை மாநகராட்சி ஆணையாளா்)

பி.குமாரவேல் பாண்டியன் - கோவை மாநகராட்சி ஆணையாளா் (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளா் -பணிகள்).

முழு கட்டுரையைப் படிக்க →