ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான மூப்பனார் நினைவு நாள் அக்கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதில், ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் த.மா.கா. கட்சி அலுவலகத்தில் மூப்பனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில பொதுசெயலாளர் விடியல்சேகர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர் ராம் லட்சுமணன், ரபீக், துணை தலைவர்கள் ஜெகதீஷ், பிரபாகர், பகுதி செயலாளர் சதாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.