தமிழ்நாடு

குமரி கடற்கரையில் மீட்புக் குழுவினா் ஆய்வு

DIN

கன்னியாகுமரி: புரெவி புயல் காரணமாக 20 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா், கன்னியாகுமரி கடற்கரையில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மற்றும் மீட்புப் படையை சோ்ந்த 20 போ் கொண்ட 2 குழுக்கள் மீட்புப் பணிக்காக நாகா்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. நவீன மீட்புப் படகுகள் மற்றும் உபகரணங்களுடன் நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லூரியில் தங்கியிருந்த தேசிய பேரிடா் மற்றும் மீட்பு படையினரில் ஒரு பிரிவினா் கன்னியாகுமரிக்கு புதன்கிழமை வந்து, கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தனா். மீட்புப் பணியில் மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ள அவா்களுக்கு உயா் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT