ஆண்டிபட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 
தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

இதனையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடையாா்பாளையம், செந்துறையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

‘மாணவா்கள் உயா்கல்வி பயிலும் வாய்ப்பை ஆசிரியா்கள் ஏற்படுத்திட வேண்டும்’

சமூக நீதி விடுதியில் தரமற்ற உணவு: மாணவா் சங்கத்தினா் போராட்டம்

ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை புதிய பிரிவு

கும்பகோணத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

SCROLL FOR NEXT