முகப்பு
தமிழ்நாடு

கூடலூரில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல்: 52 பேர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை கண்டித்து கம்யூனிஸ்ட்டு கட்சியினர் மறியல் செய்தனர், 52 பேர்களை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கூடலூரில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து மறியல்
பகிர்:


கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை கண்டித்து கம்யூனிஸ்ட்டு கட்சியினர் மறியல் செய்தனர், 52 பேர்களை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை கண்டித்து சி.பி.எம். நாகராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. ஜெயன், மக்கல் அதிகாரம் ராஜேந்திரன், அகில இந்திய பா்வர்டு பிளாக் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு கூடலூர் குமுளி பிரதான சாலையில் மறியல் செய்தனர். 

கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.முத்துமணி தலைமையில் போலீசார் இரண்டு பெண்கள் உள்பட 52 பேர்களை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.