முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சேலம் சிவதாபுரம் சேர்ந்த வீரமணி (36). இவர் சேலத்தில் உள்ள வெள்ளி நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். வேலை விஷயமாக 26 கிலோ வெள்ளி நகைகளை மூணு பைகளில் சேலத்திலிருந்து செகந்திராபாத்திற்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி தனியார் உணவகத்தில் சனிக்கிழமை இரவு சாப்பாட்டுக்காக பேருந்தை நிறுத்தியபோது சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்த போது பத்து கிலோ வெள்ளிப் பை காணவில்லை அதன் மதிப்பு ரூ. 5.25 லட்சம்.

இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →