திருநெல்வேலி பேட்டை பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளில் பச்சைக்கொடி கட்டியிருந்த வணிகர்கள். 
தமிழ்நாடு

நெல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகளில் பச்சைக்கொடி!

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் வணிகர்கள் தங்களது கடைகளில் பச்சைக்கொடிகளை செவ்வாய்க்கிழமை கட்டி ஆதரவு தெரிவித்தனர்.

DIN

திருநெல்வேலி: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் வணிகர்கள் தங்களது கடைகளில் பச்சைக்கொடிகளை செவ்வாய்க்கிழமை கட்டி ஆதரவு தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறக்கோரி தில்லியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு சில வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்திருந்தனர்.

பேருந்து, ஆட்டோ ஆகியவை வழக்கம்போல் இயங்கின. பேட்டை பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் தங்களின் கடைகள்தோறும் பச்சைக்கொடிகளைக் கட்டினர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு மதிப்பளித்து சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெறுவது தவறில்லை. அதுகுறித்து பரிசீலித்து நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

SCROLL FOR NEXT