தமிழகத்தில் புதிதாக 1,218 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,218 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 1,218 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் இன்று (சனிக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,218 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,97,693 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 345 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,296 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,75,602 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய அறிவிப்பில் மேலும் 13 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,883 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இன்று 71,690 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய நிலவரப்படி 10,208 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.