முகப்பு
தமிழ்நாடு

திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு

திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
திமுக முன்னாள் அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா அண்மையில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக புகாா் எழுந்துள்ளது. 
இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, அவதூறு பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →