முகப்பு
தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது

நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் மழை காரணமாக கடந்த சில வாரங்களாக உச்சத்தைத் தொட்ட காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது
பகிர்:


சென்னை: நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் மழை காரணமாக கடந்த சில வாரங்களாக உச்சத்தைத் தொட்ட காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் வரத்துக் குறைந்து, விலை பல மடங்கு அதிகரித்திருந்தது.

மொத்த விற்பனையில் விலை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்தால், சில்லறை விற்பனையில் அது மிகப்பெரிதாக எதிரொலிப்பது வழக்கம்.

தற்போது புயல், மழை பாதிப்புகள் நீங்கி, வழக்கம் போல கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்திருப்பதால், விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

இன்றைய காய்கறி விலை நிலவரம் (கிலோ)
கத்திரிக்காய் - ரூ.35
கேரட் - ரூ.55
பீட்ரூட் - ரூ.35
பீன்ஸ் - ரூ.45
தக்காளி - ரூ.25
பச்சை மிளகாய் - ரூ.30
வெங்காயம் - ரூ.40
சின்ன வெங்காயம் - ரூ.100
உருளைக்கிழங்கு - ரூ.40
முருங்கைக்காய் - ரூ.40
அவரைக்காய் - ரூ.55 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →