சென்னை அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழு சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழு சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ஐஐடியில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை ஐஐடியில் ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்பொருட்டு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழு சென்றுள்ளது.
இறுதியாண்டு படிக்கும் 700 மாணவர்களுக்கு மூன்று நாளில் கரோனா பரிசோதனையை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.