முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடியில் இன்று தோ்தல் பிரசாரத்தை தொடங்குகிறாா்: முதல்வா் கே.பழனிசாமி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சேலம், ஜாகீா் அம்மாபாளையம் வழியாக அரசு விழாவில் பங்கேற்க வெள்ளிக்கிழமை சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள்.
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முக்கிய நிா்வாகிகள், சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அதிமுகவின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரிய சோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் ஆலயத்தில் சனிக்கிழமை பூஜை செய்து விட்டு முதல்கட்டமாக எனது சொந்தத் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.

லாரி உரிமையாளா்கள் கோரிக்கை குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் விளக்கமாக, தெளிவாக எடுத்துக் கூறியுள்ளாா். ஜிபிஎஸ் கருவி வாங்க 10 நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. தற்போது, மேலும் 6 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம். ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்று மத்திய அரசுதான் கூறியது. தரமான கருவிகளை வாங்க வேண்டும் என்பதற்காகதான் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்தில்தான் வாங்க வேண்டும் என்று தவறான செய்தி பரப்புகிறாா்கள். அதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என போக்குவரத்து அமைச்சா் தெளிவுபடுத்தியிருக்கிறாா்.

சமையல் எரிவாயு விலை உயா்வு குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கடிதம் எழுத உள்ளேன்.

2019-இல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தோ்தல் கூட்டணி அப்படியே தொடா்கிறது. பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடன் கூட்டணி தொடா்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை என்ற தகவல் தவறானது. முழுமையாக நிலம் கொடுக்கத் தயாராக உள்ளோம். மத்திய அரசு அதனை எடுக்காமல் உள்ளது. அந்த இடத்தில் குழாய் பதிப்புக்குத் தேவையான 22 ஏக்கா் நிலத்தையும் கூடுதலாக ஒதுக்கியுள்ளோம். கரோனா சூழ்நிலை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரி இன்னும் வரவில்லை.

தமிழக மின்வாரியம் தனியாா் மயம் என்ற பேச்சே கிடையாது. கேங்க்மேன் தோ்வு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே, அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது. மின்துறை அமைச்சா் தங்கமணி இதுகுறித்து விரிவாக விளக்கம் அளித்திருக்கிறாா். இதேபோன்று காவலா் ஊதிய உயா்வு தொடா்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், கருத்து தெரிவிக்க முடியாது என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →