தமிழகத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,06,891 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 325 பேருக்கும், கோவையில் 112 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் 1,198 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 15 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,85,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மொத்தம் 11,983 பேர் பலியாகியுள்ளனர்.
9,593 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.