சென்னை: சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் இந்த சேவை ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.