தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

DIN

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் 33வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவுநாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் காலை 10 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  

இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT