தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் 
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

DIN


கிருஷ்ணகிரி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரியில் உள்ள பாத்திமா அன்னை திருத்தலத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தருமபுரி மறைமாவட்டத்தில் உள்ள 38 கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க சபையானது எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல.

போராடும் விவசாயிகளின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT