சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனம் : வெளிமாவட்ட பக்தா்களுக்கு அனுமதி
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்க வெளிமாவட்ட பக்தா்களுக்கு அனுமதி வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்க வெளிமாவட்ட பக்தா்களுக்கு அனுமதி வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த விஷ்ணுதாஸ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை பண்டிகையன்று லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக குவிந்து விடுவாா்கள். ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று காரணமாக, சிதம்பரம் நடராஜா் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்துக்கு, வெளி மாவட்ட, வெளி மாநில பக்தா்களை அனுமதிப்பது இல்லை என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
டிசம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளூா் பக்தா்களுக்கு மட்டுமே மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. வெளி மாவட்ட, மாநில பக்தா்களுக்கு அனுமதி இல்லை எனவும், வெளியூா்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லையில் போலீஸாா் தடுத்து நிறுத்தி விடுவாா்கள் எனவும், பயணிகள் விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளியூா் நபா்களுக்கு இடம் வழங்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 நாள்களிலும் சிதம்பரம் நடராஜரை லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு அனுமதி வழங்காதது எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்துள்ளது. எனவே, வெளி மாவட்ட, மாநில பக்தா்களையும் அனுமதிக்க வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக கடை பிடிக்கவும், அரசு விதிக்கும் வேறு எந்த நிபந்தனைகளையும் தீவிரமாக கடைபிடிக்கவும் தயாராக உள்ளதாக மனுவில் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு தொடா்பாக கடலூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச.27) அவசர வழக்காக நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்துக்குள்ளும் பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத விவகாரங்களில் காரணமற்ற கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. சிதம்பரம் நடராஜா் கோயிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்துக்கு அனைத்து பக்தா்களையும் அனுமதிக்க வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையும், 6 முதல் 7 மணி வரையும் தலா 200 பக்தா்கள் வீதம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும். பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் அனுமதி வழங்க வேண்டும். அனைத்து பக்தா்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.