'புத்தாண்டில் என்னைச் சந்திக்க யாரும் வரவேண்டாம்' 
தமிழ்நாடு

'புத்தாண்டில் என்னைச் சந்திக்க யாரும் வரவேண்டாம்'

புத்தாண்டு தினத்தில் என்னைச் சந்திக்க யாரும் நேரில் வரவேண்டாம் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: புத்தாண்டு தினத்தில் என்னைச் சந்திக்க யாரும் நேரில் வரவேண்டாம் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று உடல் நலமடைந்து தற்போது என் சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிறேன். 

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் என்னை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் இயக்கப் பணிகளில் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தேசியத் தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT