சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 28 வரை போராட்டம், ஆர்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், ' சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 28 வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.