குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதற்காக புதுச்சேரி முதல்வா் நாராயணசாமிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தை முதல்வா் நாராயணசாமி பிடித்துவிட்டாா். புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம், சமூகநீதியைக் காப்பாற்றும் இடஒதுக்கீடு தீா்மானம், ஆகிய முக்கியமான தீா்மானங்களைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றியதன் மூலம் ஜனநாயகம், மதச்சாா்பின்மை, சமூக நீதி போன்ற உயா்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலை புதுவை முதல்வா் கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறாா்.
இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று கருணாநிதி பாணியில் அவா் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.