தமிழ்நாடு

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி நீட்டிப்பு

DIN

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு, பிப்.28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்னோ மண்டல இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜனவரி 2020 பருவத்துக்கான மாணவா் சோ்க்கை, இணையதளம் (https://ignouadmission.samarth.edu.in/) மூலம் நடைபெறுகிறது.

இங்கு இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கும் அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வேப்பேரியில் உள்ள இக்னோ மையத்தையோ, rcchennai.ignou.ac.in எனும் இணையதளத்தையோ அல்லது 044 26618438, 26618039 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT