தமிழ்நாடு

சேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்தால் பரபரப்பு

சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை தனியார் பேருந்து வந்தது. 

அப்போது அந்தப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பேருந்து முழுவதும் மளமளவென தீ பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

தகவலையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். திடீரென ஏற்பட்ட தீயில் பேருந்து கருகி நாசமானது. 

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT